பல இனம், சமயங்களைச் சேர்ந்த சிங்கப்பூரர்கள் தங்களுக்கிடையே இருக்கும் வேற்றுமைகள் குறித்துக் கருத்தில் கொள்வதற்குப் பதிலாக ஒற்றுமையில் கவனம் செலுத்த வேண்டும் என துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் கூறி யுள்ளார். இதன் வழியாக நாம் ஒற்றுமையான சமுதாயத்தைக் கட்டமைக்க முடியும் என்றும் குறிப்பிட்டார் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ. பொங்கோலில் இருக்கும் அல்-இஸ்லா பள்ளிவாசலை பாசிர் ரிஸ் - பொங்கோல் குழுத்தொகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளார் களின் ஏற்பாட்டில் நேற்று சுற்றிப் பார்த்த பிறகு செய்தியாளர்களிடையே அவர் இவ்வாறு சொன்னார்.
சொந்த நாட்டில் தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டிருந்த 27 பங்ளாதேஷி ஊழியர்கள் கைதுசெய்யப் பட்டதாக கடந்த புதன்கிழமை அறிவிக்கப்பட்டதை அடுத்து அமைச்சர் இவ்வாறு கருத் துரைத்தார். இது கடந்த 15 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கை என ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. பல சமூகத்தைச் சேர்ந்தவர் ஒன்றுகூடி வாழ்வதால் சிங்கப்பூரில் சமூக நல்லிணக்கமும் அமைதியும் பேணப்பட்டுள்ளாதாக திரு டியோ சொன்னார்.
அல்-இஸ்லா பள்ளிவாசலைப் பார்வையிட்டவர்களிடையே துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் உரையாடினார். பாசிர் ரிஸ் = பொங்கோல் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான சன் சூலிங் (பச்சைநிற உடையில்) உடனிருந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்