வேற்றுமைகளை விடுத்து ஒற்றுமையில் கவனம் தேவை

பல இனம், சம­யங்களைச் சேர்ந்த சிங்கப்­பூ­ரர்­கள் தங்களுக்­கிடையே இருக்­கும் வேற்­றுமை­கள் குறித்­துக் கரு­த்தில் கொள்வதற்­குப் பதிலாக ஒற்­றுமை­யில் கவனம் செலுத்த வேண்டும் என துணைப் பிர­த­மர் டியோ சீ ஹியன் கூறி ­யுள்­ளார். இதன் வழியாக நாம் ஒற்­றுமை­யான சமு­தா­யத்தைக் கட்­டமைக்க முடியும் என்றும் குறிப்­பிட்­டார் தேசிய பாது­காப்பு ஒருங்­கிணைப்பு அமைச்­ச­ரு­மான திரு டியோ. பொங்­கோ­லில் இருக்­கும் அல்-இஸ்லா பள்­ளி­வா­சலை பாசிர் ரிஸ் - பொங்கோல் குழுத்­தொ­கு­தியைச் சேர்ந்த குடி­யி­ருப்­பா­ளார்­ களின் ஏற்­பாட்­டில் நேற்று சுற்றிப் பார்த்த பிறகு செய்­தி­யா­ளர்­களிடையே அவர் இவ்வாறு சொன்னார்.

சொந்த நாட்டில் தாக்­கு­தல்­கள் நடத்­தத் திட்­ட­மிட்­டி­ருந்த 27 பங்­ளா­தே‌ஷி ஊழி­யர்­கள் கைது­செய்­யப்­ பட்­ட­தாக கடந்த புதன்­கிழமை அறி­விக்­கப்­பட்­டதை அடுத்து அமைச்­சர் இவ்வாறு கருத் ­துரைத்­தார். இது கடந்த 15 ஆண்­டு­களில் எடுக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய பாது­காப்பு நட­வ­டிக்கை என ஸ்ட்­ ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்­டது. பல சமூ­கத்தைச் சேர்ந்த­வர் ஒன்­று­கூடி வாழ்­வ­தால் சிங்கப்­பூ­ரில் சமூக நல்­லி­ணக்­க­மும் அமை­தி­யும் பேணப்­பட்­டுள்­ளா­தாக திரு டியோ சொன்னார்.

அல்-இஸ்லா பள்­ளி­வா­சலைப் பார்வையிட்டவர்களிடையே துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் உரையாடினார். பாசிர் ரிஸ் = பொங்கோல் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான சன் சூலிங் (பச்சைநிற உடையில்) உடனிருந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!