சென்னை: தேர்தல் வாக்குறுதி களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று உரையாற்றிய அவர், தனக்குப் பிறகும் கூட அதிமுக மக்களுக் காகத் தொடர்ந்து இயங்கும் என்றார். "தமிழகத்தை ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைக்கவும் தமிழர்களின் மொழி, இன, கலாசார உணர்வுகளை மீட்டெடுத்து எதற்கும் கை ஏந்தும் ஏழ்மை நிலையை மாற்றி, எதிர்காலத் தமிழ் இளைஞர்கள், இளம் பெண்கள் தலைநிமிர்ந்து சொந்தக் காலில் நிற்பதற்கான வழியை உருவாக்கிடுவோம் எனத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தோம்.
"கல்வி, மருத்துவம், விவசா யம், நதிநீர், அடிப்படைக் கட்ட மைப்பு, வீடு, மின்சாரம், தொழில் துறைகளுக்கு மிகவும் முக்கியத் துவம் கொடுத்து, தமிழகத்தை தலைநிமிரச் செய்வதுதான் அதிமுகவின் லட்சியம். இதை பிரகடனம் செய்து, இவற்றை எல்லாம் நிறைவேற்ற செயல் படுத்தப்படும் திட்டங்களைப் பற்றி தேர்தல் அறிக்கையில் தெரி வித்திருந்தோம். அவை அனைத் தும் நிறைவேற்றப்பட்டுள்ளன," என்றார் ஜெயலலிதா.