முதியவர்களை இலக்காகக் கொண்ட தொழில்நுட்ப, இணைய முகாம்

வடகிழக்கு வட்டாரத்தில் வசிக் கும் 450க்கு மேற்பட்ட முதிய வர்கள் தொழில்நுட்பம் தொடர் பான உதவிக் குறிப்புகளை 10 முதல் 15 வயது வரையிலான இணையத்தை நன்கு பயன்படுத்த தெரிந்த மாணவர்களிடம் நேற்று கற்றுக் கொண்டனர். ஆகப் பெரிய தலைமுறைகளுக் கிடையிலான முகாமுக்கு தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையம் (ஐடிஏ), வடகிழக்கு சமூக மேம் பாட்டு மன்றம், போஸ்பேங்க் வங்கி, 18 பள்ளிகள் ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன. கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த முகாமை பிற்பகல் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார் துணைப் பிரதமரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ சீ ஹியன்.

இவ்வாண்டு மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த முகா மில் முதியவர்கள் மூன்று மணி நேர தகவல் தொழில்நுட்ப பயி லரங்குகளில் பங்கேற்கலாம். கீபோர்ட், மவுஸ் ஆகியவற்றை எப்படி பயன்படுத்துவது, இணை யத்தில் எவ்வாறு தகவல் திரட் டுவது போன்ற அடிப்படை கணி னித் திறன்கள் அந்தப் பயிலரங் கில் கற்றுத் தரப்படும்.

வைட் சேண்ட்ஸ் கடைத் தொகுதியில் நேற்று இலியாஸ் பார்க் தொடக்கப் பள்ளி மாணவர்கள் முதியவர்களுக்குத் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்த கற்றுக் கொடுக்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!