தமிழவேல்
நாதஸ்வரம், தவில், உறுமி மேளம் கொட்ட வழியெங்கும் ஆடிக்கொண்டே களைப்பு மறந்து காவடி சுமந்த பக்தர் களின் ஆட்டம் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் உட் பட பலரையும் உற்சாகப்படுத் தியது. கிட்டத்தட்ட 40 ஆண்டு களுக்குப் பின்னர் இந்த தைப் பூசத் திருவிழாவுக்கு உயிரூட்டி யது நேரடி இசை.
தைப்பூசத் திருவிழாவில் புத்துணர்ச்சி தென்படுகிறது என்றும் புதிய ஏற்பாடுகளால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதைக் காண முடிகிறது என்றும் நேற்று தைப்பூசத் திருவிழாவைக் காண வந்த அமைச்சர் கா. சண்முகம் கூறினார்.
சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் முதல் தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் வரையிலான 4 கிலோ மீட்டர் பாதை நெடுகிலும் இவ்வாண்டு பக்தி இசை மழை பொழிந்தது. பிற்பகலில் பெய்த மழையை யும் பொருட்படுத்தாமல் வழியில் இருந்த மூன்று நேரடி இசை மேடைகளுக்கு அருகே காவடி ஏந்திய பக்தர்கள் தங்கள் களைப்பு தீர ஆடி மகிழ்ந்தனர். காலையில் பெருமாள் கோயி லுக்கு வருகை தந்த அமைச்சர் சண்முகம் பக்தர்களுடன் பேசி யதுடன் கிச்சனர் சாலை வரை நடந்து சென்றார். பின்னர் டோபி காட் அருகே அமைக்கப் பட்ட நேரடி இசைக் கூடத்தையும் அவர் பார்வையிட்டார்.
நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற்ற மையங்களில் ஒன்றுக்குச் சென்றிருந்த சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், காவடி ஆட்டம் ஆடிய பக்தரைப் பார்வையிட்டார். படம்: திமத்தி டேவிட்