வெளிநாட்டு, உள்நாட்டு வீட்டுப் பணியார்களுக்கு உதவி செய்யக் கூடிய புதிய மையத்தை என்டியுசி நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்துள்ளது. தாம்சன் ரோட்டில் கோல்ஹில் செண்டரில் அமைந்துள்ள இந்த மையத்தை தொழிற்சங்கத் தலை வரும் பிரதமர் அலுவலக அமைச்ச ருமான சான் சுன் சிங் திறந்து வைத்தார். வேலை தொடர்பான சவால் கள் குறித்த உதவி தேவைப்படும் பணிப்பெண்கள் இந்த மையத் திற்குச் செல்லலாம். அல்லது 1800 2255233 என்ற கட்டணமில்லாத்தொலைபேசியில் அழைத்து ஆங்கிலம், பாசா இந்தோனீசியா தவிர டகலோக், பர்மிய மொழி, கம்போடிய மொழிகளில் உரை யாடலாம்.
வீட்டுப்பணியாளர் மையத்தின் ஊழியர் அந்த அழைப்பை ஏற்பார். மனநலம் சார்ந்த அறிகுறிகளை உடனே உணர்ந்தறிய அவர் பயிற்சி பெற்றிருப்பார். உதவி கோரும் பணிப் பெண்ணின் தேவைக்கு ஏற்ப மனிதாபிமான உதவிகளோ தங்கு மிட வசதியையோ வீட்டுப் பணி யாளர் மையம் செய்து தரும். சம்பளம் சார்ந்த சச்சரவுகள் மட்டுமின்றி சிங்கப்பூருடன் ஒன்ற முடியாதது போன்றவை பணிப் பெண்களுக்கு இருக்கும் முக்கிய மான சில பிரச்சினைகள் என்று என்டியுசி கூறியது.