சிங்கப்பூரில் சிக்கா கிருமித் தொற்று இதுவரை இல்லை என்ற போதிலும் அந்தக் கிருமி குறித்த நிலவரத்தைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கப் போவதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது. "சிக்கா கிருமிக்கு எதிரான முன்னெச்செரிக்கை நடவடிக்கை குறித்து சுகாதார அமைச்சு ஆலோசிக்கிறது," என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் 'தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸி'டம் கூறினார். டெங்கியைப் பரப்பும் ஏடிஸ் கொசுதான் சிக்கா கிருமியையும் பரப்புகிறது. சிக்கா கிருமி தொற்றினால் மிதமானது முதல் கடுமையான காய்ச்சல் வரை வரலாம். அத்துடன், சருமத் தடிப்பு, எலும்பு வலி போன்றவையும் ஏற் படக்கூடும்.
சிக்கா கிருமி ஆயிரக்கணக் கான பிறப்புசார்ந்த குறைபாடு களுக்குக் காரணமாகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. சிக்கா கிருமி தாக்கப்பட்ட தாய் ஈன்றெடுக்கும் குழந்தை மூளை பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய சிறிய தலையுடன் பிறக்கும். "தற்போது தென்அமெரிக்கா வில், குறிப்பாக பிரேசிலில் சிக்கா கிருமியின் தாக்குதலும் தொற்றும் மிக அதிகமாக இருக்கிறது.