வாஷிங்டன்: அமெரிக்காவின் கிழக்குக் கடலோரப் பகுதிகளைத் தாக்கிய மோசமான பனிப்புயல் அந்த வட்டாரத்தையே முடக்கியுள்ளது. இதில் 85 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பனிப்பொழிவு 40 அங்குலத்திற்கு இருந்தததால் 11 மாநிலங்களில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டது. அதோடு நியூயார்க் நகரில் அனைத்து முக்கியமற்ற பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.
பனிப்புயலில் இதுவரை 18 பேர் மாண்டனர். இவர்களில் பலர் போக்குவரத்து விபத்துகளில் சிக்கியவர்கள். இருபது மாநிலங்களம் மாசமான பனிப்புயலால் பாதிக்கப்பட்டன. நியூயார்க், டென்னசி, ஜார்ஜியா, கென்ட்டக்கி, நார்த் கேரோலினா, நியூஜெர்சி, வெர்ஜினியா, மேரிலேண்ட், பென்சில்வேனியா உட்பட பல இடங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. கென்ட்டக்கி, பென்சில்வேனியா போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 மணி நேரங்களுக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.