குணச்சித்திர நடிகை கல்பனா திடீர் மரணம்

பிரபல குணச்சித்திர நடிகை கல்பனா நேற்று திடீரென மரணமடைந்தார். இவர் நடிகை ஊர்வசியின் சகோதரி ஆவார். கேரள மாநிலம் திருவனந்த புரத்தைச் சேர்ந்தவர் நடிகை கல்பனா. மலையாளப் பட உலகில் 'திக் விஜயம்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். அன்று தொடங்கிய அவரது கலைப்பயணத்தின் வழி ஏராள மான படங்களில் தோன்றி, தனது குணச்சித்திர, நகைச்சுவை நடிப் பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். 1983ல் பிரபல மலையாளக் கதாசிரியர் வாசுதேவ நாயரின் 'மஞ்சு' (மூடுபனி) என்ற மலை யாளப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வகையில் பிரபலமானார் கல்பனா. அதன் பிறகு நகைச்சுவை வேடங்களில் கவனம் செலுத்தினார்.

'தனிச்சு அல்ல நான்' என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் கல்பனா. தமிழில் பாக்கியராஜ் ஜோடியாக 'சின்னவீடு' என்ற படத்தில் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். 'சதிலீலாவதி', 'பம்மல் கே. சம்பந்தம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தமிழ் உள்பட பல மொழிப்படங் களிலும் நடித்து வந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!