ஆர்சனல், லிவர்பூல் ஆகிய பிரபல இபிஎல் காற்பந்துக் குழுக்களின் முன்னாள் மத்திய திடல் ஆட்டக்காரரான ஜெர்மைன் பென்னன்ட் (வலது) சிங்கப்பூரின் தெம்பனிஸ் ரோவர்ஸ் குழுவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நம்பிக்கையில் உள்ளார். நேற்றுக் காலை சிங்கப்பூர் வந்திறங்கிய அவர் மாலையில் அக்குழுவினருடன் பயிற்சியில் ஈடுபட்டார்.
தம்மால் சிங்கப்பூர் காற்பந்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், "நான் இங்கு காற்பந்து ஆட மட்டும் வரவில்லை. தெம்பனிஸ் குழுவிற்கு உதவுவதுடன் ஆலோசனை தேவைப்படும் இளையருக்கும் உதவ வந்துள்ளேன்," என்றார். படத்தில் அவருடன் தெம்பனிஸ் குழுவின் பயிற்றுவிப்பாளர் வி. சுந்தரமூர்த்தி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்