இருபது ஆண்டுகளில் முதல் முறையாக தமிழ் முரசு செய்தித் தாளின் விலை உயரவிருக்கிறது. இவ்வாண்டு மார்ச் முதல் தேதியிலிருந்து அதன் விலை 10 காசு உயர்கிறது. சந்தா மூலம் செய்தித்தாளைப் பெறுவோர் இனி மாதந்தோறும் 17 வெள்ளி 90 காசுகள் செலுத்துவர். தற்போதைய அதன் விலை $15.50. எனினும், குறிப்பிட்ட கால சந்தாதாரர்கள் அவர்களின் சந்தாக் காலம் முடியும்வரை தற்போதைய விலையையே செலுத்துவர். புதிய சந்தா தொடங்கும்போதுதான் புதிய கட்டணம் நடப்புக்கு வரும்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக எண்பது வயதை எட்டியது தமிழ் முரசு. ஒரு சிறிய சமூக செய்தித்தாள் உயிர் பிழைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் தழைத்து ஓங்குவது ஒரு பெரிய சாதனை. அதற்குத் தமிழ் முரசைத் தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களே காரணம். வாசகர்களின் தொடர்ந்த ஆதரவை தமிழ் முரசு எதிர்பார்க்கிறது.