தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு பலத்த போட்டி யைத் தரும் வகையில் பெரும் கூட்டணியை அமைக்க திமுக திட்டமிட்டிருப்பதை அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி நேற்றுக் கோடிகாட்டியுள்ளார். "தேர்தலில் கூட்டணி என்பது வெறுக்கத்தக்கது அல்ல; வர வேற்கத்தக்கது," என்ற அவர், தமிழ்நாட்டில் ஜனநாயகத்தின் வெற்றியில் ஆர்வமுள்ள கட்சிகளை திமுக வரவேற்கும் என்றார். தமது சொந்த ஊரான திருவாரூருக்கு நேற்றுச் சென்ற அவர் காட்டூரில் உள்ள தமது தாயார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 2016 தேர்தலில் திமுக.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி தேர்தல் அறிக்கை வெளியிடுவோம்," என் றார். மக்கள் விரும்பினால் திரு வாரூரில் இந்த ஆண்டில் போட்டி யிட ஆர்வமுள்ளதாகவும் 93 வயது கருணாநிதி கூறினார். அண்மையில் திமுக = காங்கிரஸ் கூட்டணிக்கு கருணா நிதி அழைப்பு விடுத்தார். மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர் அழைப்புக்கு ஆதரவு தெரிவித்தார்.