பிரான்சில் டாக்சி ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டம்

பாரிஸ்: பிரான்சில் டாக்சி ஓட்டுநர்கள் கடும் போட்டியை எதிர்கொண்டு வருகின்றனர். காரணம் தற்போது தனியார் கார் நிறுவனங்களும் பயணிகளை ஏற்றிச்செல்லும் சேவையைத் தொடங்கியிருக்கின்றன. தற்போது உபர் போன்ற கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் சினமுற்ற டாக்சி ஓட்டுநர்கள் பாரிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமான நிலையங்களிலும் முக்கிய சாலைகளிலும் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்ட தாகவும் தகவல்கள் கூறின. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட டாக்சி ஓட்டுநர்கள் சாலைகளில் டயர்களை ஆங்காங்கே வைத்து வாகனங்கள் செல்வதை தடை செய்ததாகக் கூறப்பட்டது. பாரிஸ் நகரில் மறியல் போராட்டம் காரணமாக பல விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

பாரிஸ் நகரில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட டாக்சி ஓட்டுநர்கள் டயர்களைப் பயன்படுத்தி சாலையில் செல்லும் வாகனங்களைத் தடை செய்கின்றனர். இதனால் முக்கிய சாலைகளில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உபர் கார்கள் போன்ற கார்கள் தங்களுக்கு போட்டியாக வந்துவிட்டதால் தங்கள் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கூறும் டாக்சி ஓட்டுநர்கள் நேற்று பல இடங்களில் சாலை மறியல் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!