ஜூரோங் சமூக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறப்புத் தேவையுடையோர் வீடு திரும்பி அன்றாட நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள ஊக்குவிக்கும் பொருட்டு ஜூரோங்ஹெல்த் 'மொபிலிட்டி' பூங்காவை அமைத்துள்ளது. பொதுப் போக்குவரத்து வசதிகளான எம்ஆர்டி ரயில் பெட்டி, பேருந்து, டாக்சி, பாதசாரிகள் கடக்கும் இடம் ஆகியவற்றுடன் படிக்கட்டுகள், சாலையோர நடைபாதை போன்றவற்றின் மாதிரிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் சிறப்புத் தேவையுடைய முதியோர் சிகிச்சைக்குப் பிறகு பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துவது பற்றி இங்கு பயிற்சிபெற முடியும். பயிற்சியின்போது குறைந்தது இரண்டு மருத்துவ நிபுணர்கள் உடன் இருப்பர். பூங்காவை அமைப்பதற்கு முன்பு, பொதுப் போக்குவரத்து வாகனங்களில் இந்தவிதப் பயிற்சி நோயாளிகளுக்கு அளிக்கப் பட்டது.