சுதாஸகி ராமன்
நகைச்சுவை, நடனம், நாடகம் போன்றவற்றை ஒன்றுசேர்த்து 'நட்சத்ரா' கலை நிகழ்ச்சியின் வழி பார்வையாளர்களைக் கவரவிருக்கிறது ரிபப்ளிக் பலதுறை தொழிற்கல்லூரியின் இந்திய கலாசார குழு. ஆண்டுதோறும் நடத்தப்படும் ''நக்ஷத்ரா', இவ்வாண்டு ஏழாவது முறையாக நடத்தப்படவுள்ளது. எல்லா வயதினரையும் கவரவுள்ளதாக அமையவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவையுடன் திகிலையும் முதல்முறையாக புகுத்தியுள்ளது தயாரிப்புக் குழு.
அடுத்த மாதம் 6ஆம் தேதி ரிபப்ளிக் கலாசார அரங்கில் பிற்பகல் 3 மணிக்கும் இரவு 7.30 மணிக்கும் இடம்பெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கு 'அபாயம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. பல சவால்களைத் தாண்டி கைவிடப்பட்ட ஒரு வீட்டுக்குள் நுழையப் போட்டிப்போடும் இரு குழுக்களைப் பற்றிய கதையைகொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி, மாணவர்கள் தங்களது திறன் களை வெளிப்படுத்தும் தளமாகக் கருதப்படுகிறது.