தடையைத் தகர்த்தெறிய புறப்பட்ட பெண்கள்

மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ‌ஷிக்னாபூர் சனீஸ்வரர் கோவிலில் சனி பகவானை வழிபடப் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பலநூறு ஆண்டு காலமாக நீடித்து வரும் இந்தத் தடையை உடைக்கும் நோக்கில் நேற்று முன்தினம் சுமார் 1,500 பெண்கள் ஒன்றுதிரண்டு கோவிலை நோக்கிப் படையெடுத்தனர். பெண்களை அனுமதிக்கக் கோரி அந்தக் கோவிலை முற்றுகையிடச் சென்ற அவர்களை போலிசார் தடுத்து நிறுத்தினர். அதனால் ஆவேச மடைந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாட்டின் குடியரசு தினத்தை 'கறுப்பு தினம்' என்று குறிப்பிட்டு அவர்கள் முழக்கமிட்டனர். இந்நிலையில், போராடும் பெண்களுக்கு ஆதரவாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கருத்துத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, இவ்விவகாரம் தொடர்பாக பேச்சு நடத்தத் தயார் என கோவில் நிர்வாகிகள் நேற்று தெரிவித்தனர். படம்: இணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!