தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமக்கு ராசியான தேனி மாவட்டம் போடித் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடலாம். அதற்கு அச்சாரமாக அங்கு வளர்ச்சி பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. எம்.ஜி.ஆர் 1987ல் மறைந்த பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது 1989ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போடி நாயக்கனூர் தொகுதியில் சேவல் சின்னத்தில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றார். தற்போதைய அரசியல் சூழ் நிலை காரணமாக ஆர்கே நகர், ஸ்ரீரங்கம் தொகுதிகளில் மீண்டும் போட்டியிட ஜெயலலிதா விரும்பவில்லை என்று தெரிகிறது. எனவே ராசியான போடியில் மீண் டும் போட்டியிட அவர் முடிவு செய் துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
போடியில் முகாமிட்டுள்ள அதிமுக குழு அங்கு அதிமுகவின் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. திமுக -தேமுதிக கூட்டணி ஏற்பட்டால் போடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி எனக் கருத்துக் கேட்டு வருகின்றனர். நூறு நாள் வேலை உறுதித் திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கு எண் விவரங்களை ஊராட்சிச் செயலாளர்கள் மூலம் சேகரித்துள்ளனர் என்று அதிமுகவினர் தெரிவித்தனர்.
அதிமுக அரசின் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். கோப்புப்படம்