தமிழவேல்
பயங்கரவாதத்துக்கு எதிரான அனைத்துலக நடவடிக்கையில் சிங்கப்பூர் ராணுவம் தொடர்ந்து தனது வளங்களை ஈடுபடுத்தும். அது சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு நேரடியான பங்கை ஆற்றுகிறது என்று தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான உலகக் கூட்டணிப் படைக்குச் சிங்கப்பூர் ஆயுதப்படை ஆதரவு அளிக்கும் என 2014 நவம்பரில் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்
டாக்டர் இங். அதைத் தொடர்ந்து பாரிஸ், இஸ்தான்புல், அண்மையில் ஜகார்த்தா உள்ளிட்ட நகரங் களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்தச் சம்பவங்களும் தீவிரவாத எண்ணங்களைக் கொண்ட தற்காக அண்மையில் சிங்கப்பூரில் 27 பங்ளாதேஷ் ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவமும் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை என்றாலும் அவை உண்மை நிலையை வலியுறுத்தும் உதாரணங்களாகத் திகழ்கின்றன.