வேலையின்மை விகிதம் குறைவாக இருந்தபோதும் கடந்த ஆண்டு 31,800 பேர் பணியில் அமர்த்தப்பட்டதாக மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 12 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டு ஆகக் குறைவான எண்ணிக்கையிலானோர் பணியில் அமர்த்தப்பட்டனர். கடந்த ஆண்டு பணியில் அமர்த்தப்பட்டோரில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள். சுமார் 100 இடங்களில் குடிமக்கள், நிரந்தரவாசிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த மாத இறுதியில் மொத்தம் 3,655,600 பேர் சிங்கப்பூரில் பணியில் இருந்தனர். அனைத்துலகப் பொருளியல் மந்தநிலை, சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்த நிலை, கட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர் எண்ணிக்கை ஆகியவற்றுக்கிடையே கடந்த ஆண்டில் வேலை வளர்ச்சி விகிதம் மந்தமாக இருந்ததாக அமைச்சு தெரி வித்தது.
பணிக்கு அமர்த்தப்பட்ட உள்ளூர், வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிடக் குறைவாகவே இருந்தது. சென்ற ஆண்டு வேலையின்மை விகிதம் குறைந்த அளவான 1.9 விழுக்காட்டி லேயே இருந்தது தெரியவந் துள்ளது. 2014ஆம் ஆண்டில் வேலையின்மை விகிதம் 2 விழுக்காடாக இருந்தது. சிங்கப்பூரர்களின் வேலையின்மை விகிதம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 2.9 விழுக்காடாக இருந்தது. சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளின் கூட்டு வேலையின்மை விகிதம் 2014ஆம் ஆண்டு இருந்ததைவிட 0.1% கூடி 2.8 விழுக்காடானது.