பேங்காக்: தென்தாய்லாந்தில் உள்ள நரதிவாட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்யும் கனமழை காரணமாக அங்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. அங்கு பல பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலை யில் சாலைகளிலும் தெருக் களிலும் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலை களைக் கடந்துசெல்ல மக்கள் சிரமப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. முழங்கால் அளவுக்குமேல் தண்ணீர் தேங்கி நிற்பதாக குடியிருப் பாளர்கள் கூறுகின்றனர்.
சென்ற வாரம் பேங்காக்கில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடும் குளிர், கனமழை, வெள்ளப்பெருக்கு இவற்றால் தாய்லாந்து மக்கள் அவதிப் படும் நிலையில் இந்த பருவநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்தாய்லாந்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ள நிலையில் மக்கள் சாலையைக் கடக்க மிகுந்த சிரமப்படுகின்றனர். அடுத்த சில நாட்களுக்கு அங்கு கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி