சிங்கப்பூரில் நீண்டகால நிரந் தரவாசத் தகுதியுடன் வசிக்கும் மலேசியர்களுக்கு சிங்கப்பூர் குடி யுரிமை வழங்குவது குறித்து அர சாங்கம் சிறப்பு பரிசீலனை, சலுகை ஆகியவற்றின் அடிப் படையில் பரிசீலிக்க வேண்டும் என்று தெம்பனிஸ் குழுத் தொகுதி உறுப்பினர் பே யாம் கெங் நேற்று மன்றத்தில் கூறினார். "60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய இந்த நிரந் தரவாசி பிரிவினர் குறைந்த அள வில் கல்வி பெற்றவர்கள் அல்லது கல்வியறிவே இல்லாதவர்கள்.
இவர்கள் வளர்த்துவிட்ட இவர் களின் பிள்ளைகள் இப்போது சிங்கப்பூரர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக, இவர்கள் மட்டும் அல் லாது இவர்களோடு அவர்களின் துணைவியரும் இன்னும் மலேசிய பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர் களாக இருக்கிறார்கள்," என்றார் அவர்.