ஒவ்வொரு சிங்கப்பூரரும் தங்கள் கனவுகளை எட்ட வேண்டுமென் றால் சிங்கப்பூர் தொடர்ந்து மதிப்புக் கூட்டலை உருவாக்க வேண்டும். அத்துடன் உருவாக்கிய மதிப்புக் கூட்டலை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் நேற்று மன்றத்தில் தெரிவித்தார். அதிபர் உரை மீதான விவாதத் தின் ஐந்தாம், இறுதி நாளான நேற்று அமைச்சர் பேசினார். இந்தப் புதிய உலகளாவியப் பொருளியலில் சிங்கப்பூர் தாக்குப் பிடிக்க வேண்டுமென்றால் அது வெளிப்படையான, புத்தாக்கமிக்க, மாற்றத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய தாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
"இதை ஒருவேளை நாம் சாதிக் காமல் இருக்கக்கூடும். ஆனால், புத்தாக்கத்தை உருவாக்கும் பழக் கம் உடையவர்களான நம்மால் வாழ்க்கையின் ஓவ்வோர் அம்சத் திலும் புத்தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதால் நிச்சயமாக அந்தக் கனவு நனவாகும் சாத்தியம் உள்ளது," என்றார் திரு ஹெங். "உலகின் புத்தாக்க ஆய்வுக் கூடமாகத் திகழ சிங்கப்பூர் தொடர்ந்து பாடுபடும். உலகின் தலைசிறந்த யோசனைகள் இங்கு நிறைவேற்றப்படும்," என்று சொன்ன அமைச்சர், தாம் தலை மையேற்கும் எதிர்காலப் பொருளி யல் குழு இது குறித்து விரிவாக ஆராயும் என்றும் கூறினார்.
நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட். கோப்புப்படம்