பாரிஸ்: பிரான்சின் தலைநகர் பாரிஸில் டிஸ்னிலேண்ட் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குள் இரு துப்பாக்கிகளுடன் நுழைய முயன்ற ஒருவரை பிரெஞ்சு போலிசார் கைது செய்துள்ளனர். சுமார் 28 வயதான அந்த ஆடவரிடம் திருக்குர்=ஆன் பிரதியும் வெடிபொருளும் இருந்த தாக போலிசார் கூறினர்.
அங்குள்ள நியூயார்க் ஹோட் டலுக்குள் வியாழக்கிழமை அவர் நுழைய முயன்றபோது உலோக கண்டுபிடிப்பு கருவிகள் மூலம் அவர் பைக்குள் துப்பாக்கிகள் இருப் பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆடவரின் காதலியை போலிசார் பின்னர் கைது செய்தனர். பாரிஸ் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பிரெஞ்சு போலிசார் விழிப்பு நிலையில் இருந்து வருகின்றனர்.
டிஸ்னிலேண்ட் பகுதியில் நியூயார்க் ஹோட்டலுக்கு அருகே பிரெஞ்சு போலிசார் குவிந்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அந்த ஆடவர், அவரது பாதுகாப்புக்காக அந்த துப்பாக்கிகளை எடுத்து வந்ததாகக் கூறியதாக போலிசார் தெரிவித்துள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்