சென்னை: அண்மையில் வெளி யிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 79 லட்சம் வாக்காளர் கள் இடம்பெற்றிருந்தனர். ஆனால், வாக்காளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித் திருப்பதால் சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் போலியாக சேர்க் கப்பட்டிருக்கலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந் தார். இந்த நிலையில் நேற்று திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தலைமையிலான திமுகவினர் தலைமைச் செயல கத்தில் தலைமைத் தேர்தல் அதி காரி ராஜேஷ் லக்கானியைச் சந்தித்து போலி வாக்காளர்களை நீக்கக் கோரி மனு கொடுத்தனர்.
பின்னர் வெளியே வந்த டிகேஎஸ் இளங்கோவன் செய்தி யாளர்களிடம் பேசினார். "திமுக தலைவர் கருணாநிதி கடந்த வாரம் விடுத்திருந்த அறிக் கையில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 4 கோடியே 71 லட் சம் வாக்காளர்கள் இருந்ததை சுட்டிக்காட்டினார். ஆனால் இப் போது இவ்வாண்டு வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் உள்ளதால் மிகப் பெரிய ஐயப்பாடு ஏற்பட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன்