புகைமூட்டத்தின்போது, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சுவாசக் கவசங்கள் அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு அளித்ததா என்பதை ஆராய சோதனைகள் நடத்தப்படும் என்று சுகாதாரத் துணை அமைச்சர் லாம் பின் மின் நேற்று மன்றத்தில் தெரிவித்தார். கடந்த ஆண்டு கடுமையான புகைமூட்டம் சிங்கப்பூரைப் பாதித்தபோது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புகைமூட்ட மானியத் திட்டத்துக்கு $3.3 மில்லியனுக்கு மேல் செலவழிக்கப்பட்டது என்று குறிப்பிட்ட டாக்டர் லாம்,
அச்சமயத்தில் மருத்துவர்களை 77,000 முறை பார்த்து வந்த சிங்கப்பூரர்களின் மருத்துவச் செலவுகளும் அத்தொகையில் மானியங்களாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன என்று விளக்கினார்.