காலியாக உள்ள தொகுதியில்லா உறுப்பினர் பதவியை நிரப்பும் தீர் மானம் நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம் பாட்டாளிக் கட்சியின் திரு டேனியல் கோ அந்த இடத்தை நிரப்ப வழி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் கார சாரமான விவாதம் நடைபெற் றது. பொங்கோல் ஈஸ்ட் தனித் தொகுதியில் தோற்ற பாட் டாளிக் கட்சியின் திருவாட்டி லீ லி லியன் நிராகரித்த அந்த இடம் நிரப்பப்படவேண்டும் என்ற தீர்மானத்தை பாட்டாளிக் கட்சி முன்வைத்தது.
அந்த இடத்தை ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிட்டு தோற்ற தனது கட்சியின் திரு டேனியல் கோ நிரப்புவார் என்று முன்னதாகவே அக்கட்சி கூறி வந்துள்ளது. இதுகுறித்து பேசிய பாட் டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் திரு லோ தியா கியாங், தொகுதியில்லா உறுப் பினர் பதவி மக்கள் செயல் கட்சியின் அரசியல் நலனுக்காக உருவாக்கப்பட்டது என்றும் ஆனால் தற்போதுள்ள அரசியல் முறைக்கு உட்பட்டுதான் ஒரு விசுவாசமான எதிர்க்கட்சி செயல்படும் என்பதால் தாங்கள் திருவாட்டி லீக்குப் பதிலாக திரு கோவைத் தொகுதியில்லா உறுப் பினர் பதவிக்குப் பரிந்துரைப்பதாகவும் கூறினார்.
காலியான இடத்தை இன் னொரு எதிர்க்கட்சி உறுப்பி னரைக் கொண்டு நிரப்புவதற்குச் சட்டத்தில் இடம் உள்ளது என்றும் பாட்டாளிக் கட்சியின் தலைவர் திருவாட்டி சில்வியா லிம் குறிப்பிட்டார். இது குறித்துப் பேசிய பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங், "காலியான தொகுதியில்லா உறுப்பினர் இடத்தை நிரப்பும் தீர்மானத்தை ஆதரிக்க எந்தப் பிரச்சினையும் இல்லை என் றாலும் திருவாட்டி லீ அந்த இடத்தை நிராகரித்ததற்கான காரணங்கள் குறித்தும் அந்த இடத்தை இன்னொருவருக்குக் கொடுப்பது குறித்தும் தங் களுக்குப் பிரச்சினை உள்ளது," என்றார்.