சுதாஸகி ராமன்
பண்டிகைக் காலத்தை மகிழ்ச்சி யுடன் எதிர்நோக்கும் அதே நேரத் தில் வசதி குறைந்தவர்களையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களுக்கும் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து அவர்களுக் குள்ளும் பண்டிகை மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று திரு விக்ரம் நாயர் வலியுறுத்தியுள்ளார். சைனாடவுனில் உள்ள சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 12வது ஆண்டாக நடைபெற்ற சீனப் புத்தாண்டு ஒன்றுகூடல் விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரு விக்ரம் நாயர்.
"சீனர்களுக்கு சீனப் புத் தாண்டு மிக முக்கியமான கொண் டாட்டமாக இருந்தாலும் சிலருக்கு அதைக் கொண்டாத முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம். "அப்படிப்பட்டவர்களும் சீனப் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் சீனர் அல்லாதவர்கள் முயற்சி எடுத்து இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத் துவது பாராட்டுக்குரியது," என் றார் திரு விக்ரம்.
இந்து அறக்கட்டளை வாரியத்தின்கீழ் செயல்படும் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நேற்று நடைபெற்ற சீனப் புத்தாண்டு ஒன்றுகூடல் விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் (இடது) வழங்கும் 'ஹோங் பாவ்' உறையைக் குதூகலம் பொங்க பெற்றுக் கொள்கிறார் சீன மூதாட்டி ஒருவர். அருகில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் நிர்வாகக் குழுத் தலைவர் திரு எஸ்.நல்லதம்பி. படம்: த. கவி