வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நேற்று கல்வி உதவி நிதியை வழங்கியது தமிழர் பேரவை. 2000ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு கல்வி உதவி நிதியை வழங்கி வருகிறது தமிழர் பேரவை. உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந் தனர். குடும்ப வருமானத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், $100 முதல் $300 வரையிலான தொகையைப் பெற் றுக்கொண்டனர். இவ்வாண்டு மாணவர்களின் கல்விச் செலவுக் காக கிட்டத்தட்ட $20,000 ஒதுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
தமிழர் பேரவையின் கல்வி விருது நிகழ்ச்சிகளின் மூலம் இதுவரை 1,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ள தாகவும் ஏறக்குறைய $150,000 வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. உதவி நிதி பெற்ற மாணவர்களில் ஒருவரான ஜிங்ஷான் தொடக்கப்பள்ளி மாணவி 10 வயது சக்தி தில்லைமகேஸ்வரன் முதன்முறையாக உதவி நிதியைப் பெற்றுக்கொண்டார். குடும்பத்தில் ஒரே பிள்ளையான அவர், $150 பெறுமானமுள்ள காசோலையைப் பெற்றார். "கல்வி உதவி நிதியைப் பெற்றுக்கொள்வது உற்சாகத்தை அளிக்கிறது. பள்ளிப் புத்தகங்கள், எழுதுவதற்குரிய பொருட்களை வாங்குவதற்கு இந்தப் பணம் கைகொடுக்கும்," என்றார் தொடக்கநிலை 5ல் பயிலும் சக்தி.
தமிழர் பேரவை நேற்று ஏற்பாடு செய்திருந்த கல்வி உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சியில் ஜிங்ஷான் தொடக்கப்பள்ளி மாணவி சக்தி தில்லைமகேஸ்வரனுக்கு கல்வி உதவி நிதியை வழங்குகிறார் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் துணைத் தலைவர் திரு மு.அ. மசூது (நடுவில்). இடக்கோடியில் நிற்பவர் தமிழர் பேரவையின் தலைவர் டாக்டர் ஆர். தேவேந்திரன். படம்: தமிழர் பேரவை