சிங்கப்பூரர்களுக்காக இம்மாதத் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' திட்டத்தின் கீழ் 15 சமூக மன்றங்களில் 45க்கும் மேற்பட்ட சுய மேம்பாட்டு, திறன் மேம்பாட்டுப் பாடத் திட்டங்களை மக்கள் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அந்தப் பாடங்களில் இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். சமூக மன்றங்களில் நடத்தப் படும் கைபேசி, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் முறை, தேநீரைச் சுவைத்து மதிப்பிடுதல் போன்றவை உள்ளிட்ட பல வகுப்புகள், குடியிருப்பாளர்களின் விருப்பங்கள், வாழ்நாள் கல்வித் தேவைகள் ஆகியவற்றைப் பூர்த்தி செய்யும் நோக்கில் மக்கள் கழகம் ஏற்பாடு செய்த 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்@பிஏ' முயற்சியின் அங்க மாகும். 25 வயதுக்கு மேற்பட்ட அனைத்து சிங்கப்பூரர்களும் அவர்களது கணக்கில் சேர்ப்பிக்கப்பட்ட $500 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கிரடிட்' தொகையை இந்த வகுப்புகளுக்குப் பயன்படுத்தலாம்.
இந்த வகுப்புகளைப் பற்றிய விழிப்புணர்வை, குறிப்பாக மூத்த குடிமக்களிடையே ஏற்படுத்துவதற்காக பிடோக் சமூக நிலையத்தில் நிகழ்ச்சி ஒன்று நேற்று நடத்தப்பட்டது. இதுவரை 200க்கும் மேற்பட்ட வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கட்டணக் கழிவுக்குப் பிறகு சில வகுப்புகளுக்கான கட்டணம் 10 வெள்ளியிலிருந்து தொடங்கு கிறது. சில வகுப்புகளில் பாடத்தை முயன்று பார்த்து அவற்றில் பதிவு செய்துகொள்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.
பிடோக் சமூக மன்றம் ஏற்பாடு செய்த 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்@பிஏ' நிகழ்ச்சியில் வகுப்புகளின் மாதிரிச் செய்முறையை ஆர்வத்துடன் பார்வையிடும் மூத்த குடிமக்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்