மெல்பர்ன்: ஆஸ்திரேலியா கிராண்ட் ஸ்லாம் பொது விருது டென்னிஸ் தொடரின் கடைசி நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவிற்கான இறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோக்கோவிச்சும் 2ஆம் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆண்டி மர்ரேவும் பலப்பரிட்சை நடத்தினார்கள். போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஜோக்கோவிச் முதல் செட்டை 6=1 என எளிதில் கைப்பற்றினார். முதல் செட்டில் எளிதில் வீழ்ந்த மர்ரே 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்தார். இருந்தாலும் அந்த செட்டை அவர் 5-7 என இழந்தார்.
இதனால் ஜோக்கோவிச் 2-0 என முன்னிலை பெற்று 3வது செட்டையும் கைப்பற்றி 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற வேண்டும் என நினைத்தார். 2ஆம் நிலையில் இருக்கும் மர்ரே, நேர்செட் கணக்கில் தோல்வியடையக்கூடாது என நினைத்தார். இருவரும் இந்த எண்ணத்தில் 3வது செட்டை தொடங்கினார். ஜோக்கோவிச் 7 (7)- 6(3) எனக் கைப்பற்றி 3=0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று பொது விருதை வென்றார். ஜோக்கோவிச் ஆஸ்திரேலியப் பொது விருதை வெல்லுவது இது 6வது முறையாகும்.