வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹில்லரி கிளிண்டனின் 22 மின்னஞ்சல்கள் மிகவும் ரகசியமானவை என்பதால் அவற்றை வெளியிட முடியாது என அமெரிக்க அரசு திட்ட வட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ஒபாமாவின் முதல் பதவிக்காலத்தில் (2009 =13) வெளியுறவு அமைச்சர் பதவி வகித்தவர், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹில்லரி கிளிண்டன், 68. அவர் தனது பதவிக்காலத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் களைத் தனியார் இணையதளத்தை பயன்படுத்தி எழுதியுள்ளார்.
அமைச்சராகப் பதவி வகித்துக்கொண்டு அவர் அவ்வாறு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இது மரபை மீறிய செயலாகவும் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹில்லரியின் மின்னஞ்சல் களை மாதம்தோறும் வெளியிட உத்தரவிட்டது.