மருத்துவம் படிக்க இடம்பெற்றுத் தருவதாகப் பலரிடம் கொள்ளை

சென்னை: மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம்பெற்றுத் தருவதாகக் கூறி 4 கோடி ரூபாய் வரை சுருட்டிய சென்னையைச் சேர்ந்த இளையர் ஒருவரை காவல்துறை யினர் கைது செய்தனர். சேது மாதவன் என்ற அந்த ஆடவர் மீது திருச்சியைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியை செல்வமணி என்பவர் அளித்த மோசடிப் புகாரின் பேரில், போலிசார் இந் நடவடிக்கையை மேற்கொண்டனர். சென்னையைச் சேர்ந்த 39 வயதான சேது மாதவன், சொந்த நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் கர்நாடகாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம்பெற்றுத் தருவதாகப் பலரிடமும் கூறி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்ததாகக் கூறப்படுகிறது. திருச்சியைச் சேர்ந்த பேராசிரி யையான செல்வமணி என்பவரும் தனது மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்றுத் தருமாறு கேட்டு சேது மாதவனை அணுகியுள்ளார். அவரிடம் பேச்சு வார்த்தை நடத்திய சேது மாதவன் 37 லட்சம் ரூபாய் கொடுத்தால் இடம்பெற்றுத் தருவதாகக் கூறி உள்ளார். இதையடுத்து, தனது மகளை மருத்துவராக்கும் கனவுடன் 37 லட்சம் ரூபாயை சேது மாதவனிடம் கொடுத்திருக்கிறார் செல்வமணி.

ஆனால் தான் சொன்னபடி சேது மாதவன் நடக்கவில்லை. மருத் துவக் கல்லூரியில் அவரால் இடம் பெற்றுத்தர முடியவில்லை. இந்நிலையில் தன்னைப் போலவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலரிடமும் இதே போல் வாக்குறுதி அளித்து சேது மாதவன் லட்சக்கணக்கில் பணம் பெற்றது செல்வமணிக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் சேது மாதவன் மீது காவல்துறையில் பண மோசடிப் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலிசார், சேதுமாத வனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!