தஞ்சை: தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரி வித்தார். "தமிழகத்தில் ஏராளமான கட்சிகள் இருந்தாலும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளே மாறிமாறி ஆட்சிக்கு வருகின்றன.
எனவே இம்முறை ஆட்சியில் மாற்றம் வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர். "தமிழகத்தில் லஞ்சம், ஊழல், முறைகேடுகள் மிகுந்த ஆட்சியே தற்போது நிலவுகிறது," என முத்தரசன் மேலும் தெரிவித்தார்.