அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க அயோவா மக்கள் வாக்களிப்பு

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிபர் வேட் பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக முதன் முதலில் ஐயோவா மக்கள் நேற்று வாக்களிக்கத் தொடங் கினர். அமெரிக்காவின் இரு முக்கிய அரசியல் கட்சிகளான ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் அக்கட்சிகளின் சார்பில் தேர்தலில் போட்டியிடவிருக்கும் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்ய உள்ளன.

அதற்கான வாக்கெடுப்பு முதலில் அயோவா, நியூ ஹேம்ஷையர் ஆகிய இரு மாநிலங்களிலும் தொடங்கி உள்ளது. அயோவாவில் வசிக்கும் 3.1 மில்லியன் மக்கள் தொகையில் 584,000 பேர் ஜனநாயகக் கட்சி வாக்காளர்கள். சுமார் 611,000 பேர் குடியரசுக் கட்சி வாக்காளர்கள். எந்தக் கட்சியையும் சாராத 725,000 பேர் வாக்களிக்க பதிவு செய்து கொண்டுள்ளனர். அவ்விரு கட்சிகளின் வாக்களிப்பு நேற்றிரவு 7 மணிக்கு (சிங்கப்பூர் நேரம் செவ்வாய்க் கிழமை காலை 9 மணி) தொடங்கியது. வாக்களிப்பு முடிந்த பின்னர் வாக்குகள் ரகசியமாக எண்ணப் படும். அதிக வாக்குகளைப் பெறுபவர் மாநில அளவில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

அயோவா பிரசாரத்தின்போது ஹில்லரி கிளின்டன், தமது ஆதரவாளர்களை வரவேற்கிறார். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!