குறைந்தபட்சம் 170 பறவை யினங்கள் வந்து செல்வதாக பதிவு செய்யப்பட்ட கிராஞ்சி நன்னீர் சதுப்புநிலப் பகுதி, நகர மறுசீரமைப்பு ஆணையம், தேசியப் பூங்காக் கழகம் ஆகியவற்றால் நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் சதுப்புநிலம், மரம், புல் ஆகியவற்றில் வாழும் விலங்குகள் பற்றித் தெரிந்துகொள்ள பொதுமக்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். அப்பகுதியில் தேசியப் பூங்காக் கழகம், சிங்கப்பூர் இயற்கைச் சமூகம் ஆகியவற்றின் வழிகாட்டுதல்களுடனான சுற்றுலாக்கள் நடத்தப் படும். அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பெயர்ப்பலகைகளும் பொது மக்களுக்கு வழிகாட்டும். கிராஞ்சி நீர்த்தேக்கம் 1970 களில் உருவாக்கப்பட்டபோதே அப்பகுதியில் சதுப்புநிலமும் உருவாக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அருகில் இருந்த தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு வனவிலங்குகள் ஈர்க்கப் பட்டன. 56.8 ஹெக்டர் பரப்பிலான கிராஞ்சி சதுப்புநிலம் இரண்டு முக்கியப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முக்கியப் பாதுகாப்பு பகுதியைப் பார்வையிட வழிகாட்டுதல்களுடனான நடைப்பயணத் துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இயற்கையை ரசிக்க, நியோ டியூ உட்ஸ் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 10 மீட்டர் உயரத்தி லான கோபுரத்தில் ஏறி சதுப்பு நிலத்தின் முக்கியப் பகுதியையும் காணலாம்.