ரசம் பரிமாறாததால் மணமகன் கோபம்: நின்றது திருமணம்

பெங்களூரு: திருமண விருந்தில் ரசம் இல்லாததால் கோபித்துக் கொண்ட மணமகன், திருமணத்தையே நிறுத்தி உள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த சவுமியா, ராஜு ஆகிய இருவருக்கும் இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் திருமணத்துக்கு முந்தைய நாளன்று திருமண வரவேற் புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தன் குடும்பத்தினருடன் பங்கேற்றார் ராஜு. அப்போது பல உணவு வகைகள் பரிமாறப்பட்ட போதும், ரசம் மட்டும் வரவில்லை. இதுகுறித்து மணமகன் ராஜு கேட்டபோது, ரசம் காலியாகி விட்டதாக மணமகள் வீட்டார் கூறினர். இதனால் கோபமடைந்த ராஜு குடும்பத்தார், பாதி சாப்பிட்ட நிலையில் கைகழுவினர். மணமகள் வீட்டார் எவ்வளவோ சமாதானப்படுத்தியும், பலன் இல்லை. ராஜு குடும்பத்தார் அவர்களுக்கு என ஒதுக்கிய அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் மறுநாள் அதிகாலை நலுங்கு நிகழ்ச்சிக்காக மணமகன் குடும்பத்தினரை அழைக்கச் சென்ற போது, அந்த அறையில் யாருமே இல்லை. இரவோடு இரவாக அனைவரும் திருமண மண்டபத்தை விட்டு வெளி யேறியது தெரியவந்தது. இதனால் திருமணம் நின்றுபோனது. எனினும் திருமண விழாவுக்கு வந்திருந்த மற்றொரு இளைஞர், சவுமி யாவை திருமணம் செய்ய முன்வர, மணமகளும் சம்மதித்ததால் இருவருக் கும் திருமணம் நடந்தது. இதன் பின்னர் ரசம் பரிமாறாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பத்தினர் மீது போலிசில் புகார் செய்யப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!