பெர்லின்: ஜெர்மனியின் கோலோன் மற்றும் ஹேம்பர்க் நகரில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது பெண்கள், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்கும் குடியேறிகளுக்கும் தொடர்பிருக்க வாய்ப்பு இருக்கிறது என்று பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் முதன்முறையாகக் கூறியுள்ளார். உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதை உறுதி செய்யும்படி அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். "இந்தச் சம்பவம் வெவ்வேறு கலாசாரங்களைச் சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து வாழ முடியுமா என்ற கேள்வியை எழுப்பியதுடன் மேலும் பல கடுமையான ஐயங்களை எழுப்பியுள்ளது. "இதுபோன்ற செய்கைகளில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்தவர்களின் நடத்தை மீது சந்தேகம் எழுந்துள்ளது. பெண்களை மதிக்காத போக்குள்ள ஒரு சில கும்பலுக்கும் இதுபோன்ற செயல்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
"நாட்டின் சட்ட, ஒழுங்கைக் கடைப்பிடித்து நடக்காதவர்களுக்கு நாம் சரியான பாடம் புகட்ட வேண்டும். ஜெர்மனியின் நாடு கடத்தும் சட்டம் நமக்குத் தேவையான அனைத்தையும் கொண்டுள்ளதா என்பதை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். பாதுகாப்பற்ற உணர்வால் பெண்கள் அச்சமடைவதை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது," என்றும் பிரதமர் ஏஞ்சலா கூறினார்.