திருவனந்தபுரம்: சூரிய மின்தகடு முறைகேடு தொடர்பில் கேரள முதல் வர் உம்மன் சாண்டிக்கு எதிரான ஆதாரங்கள் விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டன. உம்மன் சாண்டி மீது குற்றம்சாட்டிய நடிகை சரிதா நாயர், இந்த ஆதா ரங்களை நேற்று முன்தினம் ஒப்ப டைத்தார். அந்த ஆதாரங்களில் பல ஒலி, காணொளி வடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. "இந்த முறைகேட்டில் தன்னைச் சிக்க வைக்க இடதுசாரிக் கட்சிகள் தம்முடன் பேரம் பேசியதாகவும் 10 கோடி ரூபாய் தருவதாகத் தெரிவித் தன என்றும் சரிதா முன்பு கூறினார். இப்போது இடதுசாரிக் கட்சிகள் தமக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிக்க வில்லை என்கிறார்.
"இவ்வாறு முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதே சரிதா கூறும் குற்றச்சாட்டுகள் எல்லாம் அடிப்படை இல்லாதவை என்பதை உறுதி செய் கிறது," என்றார் உம்மன் சாண்டி. இந்நிலையில் சரிதா நாயர் அளித் துள்ள 3 குறுந்தகடுகளில் அவர் கேரள காங்கிரசின் மூத்த தலைவர்களுடன் பேசிய உரையாடல்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிகிறது. அவர்களில் சிலர், "சூரிய மின் தகடு முறைகேட்டில் முதல்வர் உம்மன் சாண்டி பெயர் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்," என்று சரிதா விடம் கூறுவது இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சரிதா நாயரை அப்பிர முகர்கள் பலவிதமாக சமாதானம் செய்ய முயல்வது தொடர்பிலான உரையாடல்களும் குறுந்தகட்டில் உள்ளன. இதனால் கேரளாவில் காங் கிரஸ் அரசுக்கும் முதல்வர் உம்மன் சாண்டிக்கும் நெருக்கடி அதிகரித்துள் ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.