ஸிக்கா கிருமி: பிரேசிலில் பாதிக்கப்பட்ட 4,074 குழந்தைகள்

வா‌ஷிங்டன்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஸிக்கா கிருமி பிரேசிலில் அதி வேகமாகப் பரவி வருகிறது. இங்கு இந்தக் கிருமி தொடர்பான பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளின் எண்ணிக்கை 4,074 என்று அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களைப் பாதிக்கும் ஸிக்கா கிருமியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய அவசரநிலையை அறிவித்துள்ளது.

இந்நிலையில் பாலியல் உறவு மூலம் ஸிக்கா கிருமி பரவுவதாக அமெரிக்காவின் டெக்சஸ் மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். அமெரிக்காவில் டெக்சஸ் மாநிலத்தில் முதன் முறையாக ஒருவருக்கு ஸிக்கா கிருமி தொற்றியுள்ள நிலையில் டல்லாஸ் நகர சுகாதார அதிகாரிகள் இவ்வாறு கூறினர். ஸிக்கா கிருமியால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து திரும்பிய ஒருவருடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டவருக்கு இந்த கிருமி தொற்றி உள்ளது என்று அவர்கள் கூறினர். ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால் இந்தக் கிருமி பரவுவதாக கருதப்பட்டு வந்தது.

கோஸ்டா ரிக்காவில் பூச்சி மருந்து நெடி தாங்கமுடியாமல் மூக்கைப் பொத்திக்கொள்ளும் சிறுவன். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!