புதுடெல்லி: இந்திய ஹாக்கி அணித் தலைவர் சர்தார் சிங், 29 (படம்), தம்மைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக பிரிட்டிஷ் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். 'மனரீதியாக, உடல்ரீதியாக, உணர்வுரீதியாக' சர்தார் சிங் தம்மைத் துன்புறுத்தினார் என்று அந்த 21 வயதுப் பெண் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார். 2012 லண்டன் ஒலிம்பிக்கின் போது தாங்கள் இருவரும் சந்தித் ததாகவும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தங்களுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
மேலும், 2015ஆம் ஆண்டில் சர்தார் சிங் தம்மை வற்புறுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாக வும் அவர் கூறியிருப்பது இந்திய ஹாக்கி வட்டாரத்தைத் திடுக்கிடச் செய்துள்ளது. எழுத்துமூலம் புகார் அளிக்கப் பட்டிருந்தாலும் இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் படவில்லை என்றார் பஞ்சாப் மாநிலம், லூதியானா போலிஸ் ஆணையர் பி எஸ் உம்ராநங்கல். மேலும், புகார் குறித்து விசாரணை நடந்துவருவதாகவும் அவர் சொன்னார். "கருக்கலைப்பு செய்தபின் சர்தார் என்னைப் புறக்கணித்து வருகிறார். திருமணம் செய்து கொள்ளவும் மறுத்து வருகிறார்," என்று அந்தப் பெண் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், அந்தப் பெண்ணுடன் தமக்குத் திருமணம் நிச்சயிக்கப்படவில்லை என்று மறுப்புத் தெரிவித்திருக்கும் சர்தார் சிங், அதே வேளையில் அப்பெண் ணுடனான உறவு குறித்து வாய் திறக்கவில்லை.