பெண்கள் மீது தாக்கு: கெஜ்ரிவால் கண்டனம்

புதுடெல்லி: தலைநகர் புது டெல்லியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தின்போது பெண்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கத்தக் கவை என அவர் கூறியுள்ளார். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டிருந்த தலித் மாணவரான ரோகித் வெமுலா அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இதைய டுத்து நாடு முழுவதும் மாணவர் கள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது.

ரோகித்தின் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. அந்த வகையில் ஜனவரி 30ஆம் தேதி அன்று டெல்லியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் முன்பு பெண்கள் உட்பட ஏராளமான மாணவர்களும் பங்கேற்ற ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. அப்போது காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி ஆர்ப் பாட்டம் நீடித்ததால், டெல்லி போலிசார் தடியடி நடத்தினர். இச்சமயம் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்ட பெண்களின் தலைமுடியைப் பிடித்து இழுத்து ஆண் போலி சார் தாக்கியதாகக் கூறப்படுகி றது.

இது தொடர்பான காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இதையடுத்து டெல்லி காவல் துறைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் தங்கியிருந்து இயற்கை மருத்துவ சிகிச்சை பெற்று வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தமது கண்டனத்தைப் பதிவு செய்துள் ளார். தங்களை எதிர்ப்பவர்களை எல்லாம் ஒடுக்க டெல்லி காவல் துறையை மோடி அரசு பயன் படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!