புதுடெல்லி: மிச்செல் ஸ்டார்க், கோல்ட்டர் நைல், பேட் கம்மின்ஸ் போன்ற முன்னணிப் பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறாவிட்டாலும் அது இந்திய கிரிக்கெட் அணிக்குச் சாதகமாக இராது என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடுவதற்காக டோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடை யிலான முதல் ஒருநாள் ஆட்டம் வரும் 12ஆம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், முன்னணி பந்து வீச்சாளர்கள் இல்லாததால் ஆஸ்தி ரேலிய அணியின் பந்து வீச்சு வரிசை அனுபவம் குன்றியதாகக் காணப்படுகிறது.
ஃபால்க்னர், ஹேசல்வுட், கேன் ரிச்சர்ட்சன், ஸ்காட் போலண்ட், ஜோயல் பாரிஸ் ஆகியோர் அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் களாக இடம்பெற்றுள்ளனர்.