பட்லர் அதிரடி தொடர்கிறது

புளூம்ஃபோன்டைன்: தென்னாப் பிரிக்க கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி 2=1 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இங்கி லாந்து அணி, இப்போது ஒருநாள் தொடரையும் வெற்றி யுடன் தொடங்கியிருக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. மழை குறுக்கிட்ட இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 39 ஓட்ட வித்தியாசத்தில் வென்றது. முதலில் பந்தடித்த இங்கி லாந்து அணிக்கு நல்ல தொடக் கம் தந்தது ஜேஜே ராய்- அலெக்ஸ் ஹேல்ஸ் இணை. ராய் 30 பந்துகளில் 48 ஓட்டங்களையும் ஹேல்ஸ் 47 பந்துகளில் 57 ஓட்டங்களையும் விளாசினர்.

அடுத்து வந்த நம்பிக்கை நாயகன் ஜோ ரூட் தன் பங்காக 52 ஓட்டங்களை எடுத்தார். இருப்பினும், விக்கெட் காப் பாளர் ஜோஸ் பட்லரின் ஆட்டமே இங்கிலாந்து அணி இமாலய இலக்கை எட்ட உதவியாகப் பெரும் துணையாக இருந்தது. ஒருநாள் போட்டிகளில் அதி வேக சதமடித்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனைக்குச் சொந் தக்காரரான பட்லர் இம்முறை 73 பந்துகளில் சதம் கடந்தார். ஒரு நாள் போட்டிகளில் அவருக்கு இது 4வது சதம். அதிரடி ஆட் டக்காரர் பென் ஸ்டோக்ஸ் 57 ஓட்டங்களைக் குவிக்க, இங்கி லாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 399 ஓட்டங்களைச் சேர்த்தது.

76 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்சருடன் 105 ஓட்டங்களை விளாசிய இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!