ஈரான்-சவூதி அரேபியா சர்ச்சை நீடிக்கிறது

ரியாத்: சவூதி அரேபியாவும் ஈரானும் அரசதந்திர உறவுகளை முறித்துக் கொண்டுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடிக்கிறது. ‌ஷியா மதகுரு ஷேக் நிமர் அல் நிமர் உள்பட 47 பேருக்கு மரண தண்டனையை சவூதி அரேபியா நிறைவேற்றியதிலிருந்து ஈரானுக்கும் சவூதி அரேபியாவுக் கும் இடையில் சர்ச்சை நிலவுகிறது. ‌ஷியா மதகுருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஈரானில் உள்ள சவூதி தூதரகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கினர். இதனால் ஈரானுடனான அரசதந்திர உறவுகளை முறித்துக் கொள்வதாக சவூதி அரேபியா அறிவித்தது. அத்துடன் அங்குள்ள ஈரானியத் தூதர்கள் வெளியேறுவதற்கும் அது 48 மணி நேர காலக்கெடு விதித்தது. ஈரானுடனான விமானப் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் தொடர்புகளை முறித்துக் கொள்வதாகவும் சவூதி அரசாங்கம் அறிவித்தது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கும் வேளையில் அதுகுறித்து கவலை அடைவதாக உலக நாடுகள் தெரிவித்துள்ளன. சவூதி அரேபியாவில் ‌ஷியா மதகுரு ஷேக் நிமர் அல் நிமருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாக்தாத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!