வட்டார வர்த்தக தாராளமயமாக்குதலுக்கான முக்கியமான மைல்கல்லாக 'டிரான்ஸ்-பசிஃபிக் பங்காளித்துவம்' நேற்று கையொப் பமானது. அமெரிக்கா வழிநடத்திய இந்த மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில் சிங்கப்பூர் உட்பட 12 உறுப்பு நாடுகள் நியூசிலாந்தில் நேற்று கையொப்பமிட்டன. இந்தப் புதிய ஒப்பந்தத்திற்கான வர்த்தக விதிகளின்படி சிங்கப்பூர் முதலீட்டாளர்கள், வர்த்தகர் களுக்கு கணிக்கக்கூடிய தெளி வான வட்டாரச் சந்தை அமையும் என வர்த்தக, தொழில்துறை (வர்த்தகம்) அமைச்சர் லிம் ஹங் கியாங் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்திற்காக ஆக்லாந்து சென்றிருந்த திரு லிம், இந்த பங்காளித்துவத்தில் இடம்பெறும் நாடுகள் அனைத்துலக வர்த்தகத்தில் 40 விழுக்காட்டை யும் சிங்கப்பூரின் மொத்த வர்த்தகத்தில் 30 விழுக்காட்டையும் கொண்டிருப்பதாகக் கூறினார். "டிரான்ஸ்=பசிபிக் பங்காளித்துவம் விரைவில் நடைமுறைப் படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். அதன் வழியாக நமது வர்த்தகங்கள், முதலீட்டு வாய்ப்புகள் உயரும்," என்றும் திரு லிம் சொன்னார்.