மும்பை: ஆசிய, உலகக் கிண்ண டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுக வீரர் பவன் நேகி (படம்), காயத்தால் அவதிப்பட்டு வரும் முகம்மது ஷமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக் குழுவினர், அணித் தலைவர் டோனி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் அனுராக் தாக்கூர் ஆகியோர் நேற்று கூடி 15 பேர் கொண்ட அணியைத் தேர்வு செய்தனர். "ஐபிஎல், உள்ளூர் டி20 தொடர்களில் வீரர்களின் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் தந்து, தொடர் நடக்கும் இடங் களையும் கருத்தில் கொண்டு சிறந்த அணியைத் தேர்வு செ ய் தி ரு க் கி றோம்," என்றார் சந்தீப் பாட்டீல்.
அண்மையில் நடந்து முடிந்த சையது முஸ்டாக் அலி கிண்ணம், விஜய் ஹசாரே கிண்ணம் ஆகிய இரு முக்கிய உள்ளூர் தொடர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுக வீரர் பவன் நேகி