ஜோலார்பேட்டை: வேலூர் மாவட் டம், ஜோலார்பேட்டை அருகே நேற்று காலை கன்னியா குமரி=- பெங்களூரு ஐலாண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சோமநாயக்கன்பட்டி - பச்சூர் ரயில் நிலையங்களுக்கு அருகே இந்த விபத்து நடந்தது. விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்து நடந்த பகுதி பெங்களூரு ரயில்வே நிர்வாகத்துக்கு உட்பட்டது என்ப தால் பெங்களூரு பிரிவு ரயில்வே மேலாளர் சம்பவ இடம் வந்தார். தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஜோலார்பேட்டை அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளான ரயில். படம்: ஊடகம்