சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த தம் தாயாருடன் சைனா டவுன் எம்ஆர்டி நிலையத்தில் ரயிலில் இருந்து வெளியேற முற்பட்ட திருவாட்டி வாங், 45, எனும் மாதின் வலது கால் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிக்கொண்டது. வியாழன் பிற்பகல் 2.05 மணி யளவில் நேர்ந்த இந்தச் சம்பவம் பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. பயணிகள் பலர் அந்த ரயில்பெட்டியின் கதவு மூடிவிடாமல் இருக்க வேண்டிய முயற்சிகளை மேற்கொண்டனர். சிக்கிக்கொண்ட காலை விடுவிக்கும்போது வலியும் காலில் முறிவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டதாக திருவாட்டி வாங் கூறினார்.
தகவலறிந்து விரைந்து சென்ற சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் நீராற்றலால் இயக்கப்படும் கருவிகளைக் கொண்டு அவரது காலை விடுவித்தனர். லேசான காயமுற்ற திருவாட்டி வாங், தம்முடைய 70 வயதுத் தாயாரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறி மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார். இந்தச் சம்பவம் கார ணமாக அந்தத் தடத்தில் ரயில் சேவை சற்றுத் தாமனதானது.