நாகர்கோவில்: காரைக்காலிலிருந்து நேற்று முன்தினம் 9 மணிக்கு குளிர்சாதன வசதியுடைய தனியார் ஆம்னி பேருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டது. அந்தப் பேருந்தில் 40 பயணிகள் இருந்தனர். பேருந்து நேற்று அதிகாலை 5 மணி அளவில் நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த நெல்லை= நாகர்கோவில் நான்கு வழிச்சாலை யில் உள்ள பிலாக்கொட்டை பாறை என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதியது.
இதனால் ஆம்னி பேருந்து கவிழ்ந்து சாலையின் இடதுபுறத் தில் 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் பேருந்தில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென பேருந்து உருண்டு ஓடுவதைக் கண்டு அவர்கள் அலறினர். பேருந்தில் இருந்த 2 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயி ரிழந்தனர்.
பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, அந்த வழியாகச் சென்ற வர்கள் ஆம்புலன்சை வரவழைத்த னர். காயமடைந்த 30 பேர் நாகர் கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட் டனர். அப்போது அவர்களுள் ஒரு வர் மாண்டார். இதனால் பலியா னோர் எண்ணிக்கை 10 ஆனது. சிகிச்சை பெற்று வருபவர் களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.