பெட்டாலிங் ஜெயா: மலேசிய இந்தியர் காங்கிரசின் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம், தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மஇகாவின் உள்விவகாரத்திலிருந்து விலகி யிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த வாரம் முன்னைய மஇகா தலைவர் ஜி. பழனிவேலு ஏற்பாடு செய்த பொங்கல் கொண்டாட்டத்தில் தேசிய முன்னணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் பங்கேற்றன. அதனை சுட்டிக்காட்டும் வகையில் எஸ். சுப்பிரமணியத்தின் வேண்டுகோள் வெளியாகியிருக்கிறது.
"ஆம், மஇகாவில் சில உட்கட்சிப் பிரச்சினைகள் இருக் கின்றன. அவற்றைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்," என்றார் அவர். "நம்முடைய கூட்டணிக் கட்சிகளின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக் கிறோம். அதையே பிற கட்சி களிடமிருந்து நாங்களும் எதிர் பார்க்கிறோம்," என்று நேற்று நடைபெற்ற இந்திய பெண்கள் தொழில் முனைவர் கூட்டத்தில் ஜி. சுப்பிரமணியம் சொன்னார்.