வங்கி அதிகாரி பேசுவது போல பல வாடிக்கையாளர் களிடம் பேசி, கோடிக் கணக்கான ரூபாய் மோசடி செய்த கும்பல் ஹரியானா மாநிலத்தில் பிடிபட்டுள்ளது. ஏழு பேர் கொண்ட அந்தக் கும்பல், சென்னை யில் வங்கிக் கணக்கு வைத்துள்ளோரின் விவரங் களைத் திரட்டி அவர்களின் கடன்பற்று அட்டை மற்றும் கடன் அட்டைகள் மூலம் மோசடி நடத்தி வந்துள்ளது. தங்களது வங்கிக் கணக் கிலிருந்து திடீர் திடீரென பணம் மறைவதாக 400க்கு மேற்பட்டோர் புகார் தெரி வித்ததைத் தொடர்ந்து போலிசார் நடவடிக்கையில் இறங்கினர்.
ஏழு பேர் பிடி பட்டுள்ள நிலையில், வங்கி யில் விவரங்களைப் பெற்று மோசடிக் கும்பலிடம் கொடுத்த விபின் சோப்ரா என்பவர் தேடப்பட்டு வரு கிறார். கைது செய்யப் பட்டுள்ள எழுவரில் மூவர் தமிழில் பேசக்கூடியவர்கள் என்று போலிசார் கூறினர்.